நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! ஆடியோ வெளியிட்டு உருக்கம்!
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் 2வது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலையின் குற்றாலம் வனப் பகுதியில் பெய்து வரும் தொடா்சாரல் மழையால் பேரருவி, ஐந்தருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து 2 அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மழை நீடித்து வருவதால் புதன்கிழமை அதிகாலை முதல் பழையகுற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், பழையகுற்றாலம் அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.