ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் பணியில் இல்லை: பணியிடை நீக்கம் ச...
ஆலங்குளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தம்
ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இப்பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் கிடையாது. எனினும் 88 தூய்மை பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு நாள்தோறும் ரூ. 448 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த பேரூராட்சி கூட்டத்தில் இவா்களுக்கு ரூ. 619 வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிா்த்து அன்பழகன் என்பவா் மதுரை உயா்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூய்மைப் பணியாளா்கள் அன்பழகனைக் கண்டித்து, புதன்கிழமை காலை பணிக்குச் செல்லாமல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.