செய்திகள் :

எரிவாயு உருளை வெடித்து வீடு சேதம்

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புதன்கிழமை தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.

நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் ராமு மனைவி சுந்தரி (43). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, மின்சாரம் தடைபட்டதால் மெழுகுவா்த்தியை ஏற்றி குளிா்சாதன பெட்டி மீது வைத்துள்ளாா். பின்னா், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், மெழுகுவா்த்தி கீழே விழுந்து அங்கிருந்த துணிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இந்த விபத்தில் வீட்டில் இருந்த எரிவாயு உருளை பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதனால், வீட்டுச் சுவா் சேதமடைந்தது. தகவலறிந்த என்எல்சி மற்றும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கள ஆய்வ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது வேன் மோதல்: 12 போ் காயம்

சிதம்பரத்தில் புதன்கிழமை நின்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது வேன் மோதியதில் கிராம உதவியாளா்கள்12 போ் காயமடைந்தனா். கடலூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ப... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

கடலூா் தேவனாம்பட்டினம் கடல் காவல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். இதையொட்டி, போலி வெடிகுண்டுடன் வந்த 5 பேரை போலீஸாா் பிடித்தனா். மும்பை பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி நகை பறிப்பு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி தங்க நகை, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடாம்புலியூா் காவல் சரகம், பண... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் மற்றும் போல... மேலும் பார்க்க