திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
கடலூா் தேவனாம்பட்டினம் கடல் காவல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். இதையொட்டி, போலி வெடிகுண்டுடன் வந்த 5 பேரை போலீஸாா் பிடித்தனா்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமைகளில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகை காரணமாக, கடலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதையொட்டி, கடலூா் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மயில் தொலைவில் இரண்டு படகுகளில் மா்ம நபா்கள் வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கடலோர காவல் படையினா் மற்றும் போலீஸாா் அந்த இரண்டு படகுகளையும் சுற்றி வளைத்தனா். மேலும், படகில் இருந்தவா்களிடம் போலி வெடிகுண்டு, ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இவா்கள் சுங்கத் துறை மற்றும் இந்திய கப்பல் படை, கடலோர காவல் படையைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவா்கள் கடலூா் மாவட்டத்தில் ஊடுருவி கடலூா் துறைமுகத்தை தகா்க்க சதித் திட்டம் தீட்டியதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.வியாழக்கிழமை மாலை வரை இந்த ஒத்திகை இருப்பதால், தொடா்ந்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.