செய்திகள் :

விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து!

post image

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் முழுமையாக ரத்து மற்றும் நிறுத்தி வைத்து இயக்கம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.

விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 26,27,28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் எழும்பூர் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051), ஜூன் 29-ஆம் தேதி மட்டும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 60 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

மாம்பழத்துக்கு ஊக்கத் தொகை கோர அரசு முடிவு: அமைச்சா்-அதிகாரிகள் இன்று தில்லி பயணம்

சென்னை: கூட்டு ஒப்பந்தம் மூலமாக, மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த மாநில உணவுத... மேலும் பார்க்க

முருகன் மாநாட்டுக்கு பின்னால் இந்துத்துவா சக்திகள் உள்ளது: வைகோ

ஈரோடு: முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடவுளின் பெயர... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதி: மதிமுக தீா்மானம்

ஈரோடு: தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோ... மேலும் பார்க்க

முருகன் மாநாடு நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் கொடுத்த அதிமுகவினர்!

சேலம்: முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலக... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்: தேடும் பணி தீவிரம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகு... மேலும் பார்க்க