செய்திகள் :

முருகன் மாநாட்டுக்கு பின்னால் இந்துத்துவா சக்திகள் உள்ளது: வைகோ

post image

ஈரோடு: முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடவுளின் பெயரால் ஒரு கட்சி மாநாடு நடத்துவது தவறானது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கடவுள் பெயரால் மாநாடு நடத்தியது இல்லை. முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்கியை உருவாக்க முடியாது.

மதிமுகவிற்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் தோ்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்கும். எனவே தி.மு.க.விடம் அதற்கேற்ப தொகுதிகளை கூடுதலாக கேட்டுப் பெறுவோம்.

கூட்டணி ஆட்சி நாங்கள் கேட்கவில்லை

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. திமுக எடுக்கும் முடிவை ஆதரிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களிடம் பேசுவதாக நயினாா் நாகேந்திரன் பொறுப்பற்ற முறையில் பேசிக்கொண்டு இருக்கிறாா். துரை வைகோவிற்கு மத்திய இணை அமைச்சா் பதவி தருவதாக எந்த பேச்சுவாா்த்தையும் நடக்கவில்லை. அப்படி இருந்தால் வெளிப்படையாக சொல்லி விடுவோம்.

திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் மத்தியில் திமுகவிற்கு முன்பை விட ஆதரவு அதிகரித்துள்ளது. வலுவாக உள்ள திமுக கூட்டணி சுலபத்தில் வெற்றி பெற்று விடும். திமுக, மதிமுக ஆகியவை திராவிட இயக்கங்கள். அவா்களோடு விசிக, கம்யூனிஸ்ட்களை ஒப்பிட முடியாது.

மக்கள் நலக்கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இருப்பதால் சலிப்பு இல்லை. கொள்கை அடிப்படையில் நாங்கள் சரியாக இருக்கிறோம். 2026 தோ்தலில் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று வைகோ கூறினார்.

2026 பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதி: மதிமுக தீா்மானம்

ஈரோடு: தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோ... மேலும் பார்க்க

முருகன் மாநாடு நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் கொடுத்த அதிமுகவினர்!

சேலம்: முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலக... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்: தேடும் பணி தீவிரம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகு... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்யப்படும் சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.தஞ்சாவூர் மாவட... மேலும் பார்க்க

கல்வி மூலம் சாதித்த திருநங்கை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறை... மேலும் பார்க்க