செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது: மத்திய அமைச்சர்

post image

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: ”இன்று பஹல்காமுக்குச் சென்ற நான், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இயல்புநிலை திரும்பியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த பகுதியில் ரயில் வசதியின்றி பல ஆண்டுகளாக காத்திருந்ததற்கு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இப்போது இந்த பகுதிகளுக்கு ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்ற கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும், புது மைல்கல் சாதனையை எட்டுகிறோம். உள்கட்டமைப்பு, அரசு நிர்வாகம், தொழில்நுட்பம், இளைஞர் மேம்பாடு இப்படி எந்த துறையானாலும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சர் மீதும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் முறைகேடு நடைபெறுவதே வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது” என்றார்.

திருப்பதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தலைமைத் தளபதி வழிபாடு!

திருப்பதி: திருமலை ஏழுமலையான் சுவாமியை இன்று(ஜூன் 22) பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கூட்டாகச் சென்று வழிபட்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புப்படையின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌ... மேலும் பார்க்க

ஆந்திர முன்னாள் முதல்வரின் கார் முன் விழுந்த தொண்டர்: உடல் நசுங்கி பலி!

விஜயவாடா: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் முன்னே விழுந்த தொண்டரின் கழுத்தில் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் சீலி சிங்கையா என்பத... மேலும் பார்க்க

விமானம் ரத்தானதால் தேர்வெழுத முடியாமல் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

விமானம் ரத்து ஆனதால் அந்த விமானத்தில் சென்று பல்கலைக்கழகத் தேர்வு எழுதத் திட்டமிட்டிருந்த பயணியொருவர் பாதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க வாடிக... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் அகற்றும் பணி தொடக்கம்

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் சிதைந்த பாகங்களை அப்பறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்... மேலும் பார்க்க

பெண் விமானியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

பெண் விமானியை மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த குற்றத்தில் தொடர்புடைய... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும்: அமித் ஷா

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா - பா... மேலும் பார்க்க