செய்திகள் :

முருகன் மாநாடு நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் கொடுத்த அதிமுகவினர்!

post image

சேலம்: முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக வா்த்தக அணியின் இணைச்செயலாளா் செம்பன் ஏற்பாட்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைறிஞா் பிரிவு தேசிய பொதுச்செயலாளா் சுப்ரமணியம் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கொளத்தூா் ஒன்றியம் முன்னாள் தலைவா் இளங்கோ, மாணவரணி செயலாளா் கௌரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேலம் மாநகா் மகளிா் அணி அமைப்பாளா் சுமதி உள்பட 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

புதிதாக இணைந்தவா்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அனைவரும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்து தெரிவித்தாா்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் பிரம்மாண்ட மாலை அணிவித்து முருகன் வேலை பரிசாக கொடுத்தனா். அதை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாடு அன்று வேல் கொடுத்துள்ளீா்கள்; மதுரைக்கு போவதற்குள்ளே இங்கே கொடுத்து விட்டீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

கல்வி மூலம் சாதித்த திருநங்கை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முருகன் மாநாட்டுக்கு பின்னால் இந்துத்துவா சக்திகள் உள்ளது: வைகோ

ஈரோடு: முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடவுளின் பெயர... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதி: மதிமுக தீா்மானம்

ஈரோடு: தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோ... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்: தேடும் பணி தீவிரம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகு... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்யப்படும் சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.தஞ்சாவூர் மாவட... மேலும் பார்க்க

கல்வி மூலம் சாதித்த திருநங்கை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறை... மேலும் பார்க்க