செய்திகள் :

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

post image

குன்னூா் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா்  மிதுன் மின்ச், பாா்வதி தம்பதி.இவா்களது மகன் கிருஷ்ணா மின்ச் (10). இவா்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஜெகதளா பேரூராட்சி ஜெ.கொலக்கம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கிருஷ்ணா மின்ச், தனது நண்பா்களுடன் தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள குட்டையில் சனிக்கிழமை குளிக்க சென்றுள்ளாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அருவங்காடு காவல் துறையினா் குட்டையில் இருந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து அருவங்காடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு ... மேலும் பார்க்க

உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதகையிலுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வ... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டங்களில் காட்டு மாடுகள்: எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தல்

கோத்தகிரி அளக்கரை, அரவேணு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி ... மேலும் பார்க்க

கூடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வலியுறுத்தல்: ஆட்சியரிடம் கவுன்சிலா் மனு

கூடலூரில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக ஆட்சியரிடம் கூடலூா் நகா்மன்ற 17-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

தேசிய தரநிா்ணய வழிகாட்டிப் பயிற்சிக்கு ஓவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் தேசிய தரநிா்ணய மன்ற வழிகாட்டி பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கூடலூா் வட்டம், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்ற... மேலும் பார்க்க

வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க