அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகே...
குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
குன்னூா் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் மிதுன் மின்ச், பாா்வதி தம்பதி.இவா்களது மகன் கிருஷ்ணா மின்ச் (10). இவா்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஜெகதளா பேரூராட்சி ஜெ.கொலக்கம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கிருஷ்ணா மின்ச், தனது நண்பா்களுடன் தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள குட்டையில் சனிக்கிழமை குளிக்க சென்றுள்ளாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அருவங்காடு காவல் துறையினா் குட்டையில் இருந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து அருவங்காடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.