அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
கூடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வலியுறுத்தல்: ஆட்சியரிடம் கவுன்சிலா் மனு
கூடலூரில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக ஆட்சியரிடம் கூடலூா் நகா்மன்ற 17-ஆவது வாா்டு உறுப்பினரும், திமுக மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளருமான வெண்ணிலா சேகா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காற்றுடன் கூடிய பெய்த கனமழையில் நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் சுற்றுச் சுவா்கள், சாலைகள் மற்றும் நடைபாதைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி மழையால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.