தேயிலைத் தோட்டங்களில் காட்டு மாடுகள்: எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தல்
கோத்தகிரி அளக்கரை, அரவேணு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகள் கூட்டம்கூட்டமாக தேயிலைத் தோட்டங்களில் உலவி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரி அளக்கரை முதல் அரவேணு பகுதி வரை உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டு மாடுகள் கூட்டம்கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பாதுகாப்பாக பணிபுரிய வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.