அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
தேசிய தரநிா்ணய வழிகாட்டிப் பயிற்சிக்கு ஓவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் தேசிய தரநிா்ணய மன்ற வழிகாட்டி பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கூடலூா் வட்டம், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவா் இரா.ஜோசப் ரென்ஸோ. இவா், புதுதில்லி நொய்டாவில் ஜூன் 24, 25 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் தர நிா்ணய மன்ற வழிகாட்டி பயிற்சியில் கலந்துகொள்ள நீலகிரி மாவட்டத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் நந்தகுமாா் அவரை வாழ்த்தி வழியனுப்பினாா்.
இதில், பள்ளி தலைமை ஆசிரியா் கவிதா, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.