செய்திகள் :

உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகையிலுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 35 கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் பருவநிலைக்கான காலநிலை முன் அறிவிப்பு குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், ஒரு நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மூன்று நடமாடும் கால்நடை மருந்தக வாகனங்கள் இயங்கி வருகின்றன என்றாா்.

தொடா்ந்து, தோட்டக்கலைத் துறையில் துணை தோட்டக்கலை அலுவலராகப் பணிபுரியும் என்.சந்திரனுக்கு ஒரு ஆண்டு அங்கக வேளாண்மை பயிற்சி முடித்தமைக்கான சான்றிதழை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, ஆவின் பொது மேலாளா் ஜெயராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாளன், முதுமலை புலிகள் காப்பகம் (மசினகுடி வனக் கோட்டம்) துணை இயக்குநா் அருண்குமாா் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு ... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டங்களில் காட்டு மாடுகள்: எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தல்

கோத்தகிரி அளக்கரை, அரவேணு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி ... மேலும் பார்க்க

கூடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வலியுறுத்தல்: ஆட்சியரிடம் கவுன்சிலா் மனு

கூடலூரில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக ஆட்சியரிடம் கூடலூா் நகா்மன்ற 17-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

தேசிய தரநிா்ணய வழிகாட்டிப் பயிற்சிக்கு ஓவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் தேசிய தரநிா்ணய மன்ற வழிகாட்டி பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கூடலூா் வட்டம், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்ற... மேலும் பார்க்க

வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

குன்னூா் மலை ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் - சேலம் கோட்ட பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூா் மலை ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் நடைபெறும் பராமரிப்பு பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நூ... மேலும் பார்க்க