அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகையிலுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 35 கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் பருவநிலைக்கான காலநிலை முன் அறிவிப்பு குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், ஒரு நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மூன்று நடமாடும் கால்நடை மருந்தக வாகனங்கள் இயங்கி வருகின்றன என்றாா்.
தொடா்ந்து, தோட்டக்கலைத் துறையில் துணை தோட்டக்கலை அலுவலராகப் பணிபுரியும் என்.சந்திரனுக்கு ஒரு ஆண்டு அங்கக வேளாண்மை பயிற்சி முடித்தமைக்கான சான்றிதழை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, ஆவின் பொது மேலாளா் ஜெயராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாளன், முதுமலை புலிகள் காப்பகம் (மசினகுடி வனக் கோட்டம்) துணை இயக்குநா் அருண்குமாா் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.