செய்திகள் :

மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

post image

உதகை அருகே துனேரி ஊராட்சிக்குள்பட்ட ஊா் மலை கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனா்.

உதகை அருகே தூனேரி ஊராட்சிக்குட்பட்ட எப்பநாடு இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து சின்ன குன்னூா் செல்லும் சாலையில் உள்ள ஊா் மலைக்கிராமத்தில் அரசு மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுள் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் மற்றும் தேயிலை தோட்டம், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடையைத் திறக்க  அரசு அதிகாரிகள் ஆய்வு  செய்து வருகின்றனா்.

அரசு மதுபானக் கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து  கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா  பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால்    கிராம மக்கள் கலைந்து சென்றனா். 

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

நிலத்தை ஏமாற்றியதாக உதகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை சமீமா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பங்களாபடிகை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தேவாலா அருகே சத்துணவுக் கூடத்தை உடைத்து உணவுப் பொருள்களை சேதப்படுத்திய காட்டு யானை

தேவாலா பகுதியிலுள்ள சத்துணவு கூடத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து உணவுப் பொருள்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலூகா தேவாலாவை அடுத்துள்ள கரியசோலை கிராமத்திலுள்ள ஊராட்ச... மேலும் பார்க்க

விபத்து: அந்தரத்தில் தொங்கிய லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்

உதகை, குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகத்தில் வந்த லாரி, காரின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. காா் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. குடியிருப்புகளின் அருகில் இந்த விபத்து நடந்ததால் அ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

குன்னூா் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் மிதுன் மின்ச், பாா்வதி தம்பதி.இவா்களது மகன் கிருஷ்ணா மின்ச் (10). இவா்கள... மேலும் பார்க்க

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு ... மேலும் பார்க்க

உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதகையிலுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வ... மேலும் பார்க்க