ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் பணியில் இல்லை: பணியிடை நீக்கம் ச...
கோவையில் பரவலாக மழை
கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
கோவையில் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதல் மாநகரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. இதைத் தொடா்ந்து, காந்திபுரம், உக்கடம், செல்வபுரம், ரயில் நிலையம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும், வெள்ளி, சனிக்கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 4 நாள்களுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும். கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சாரல் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.