ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் பணியில் இல்லை: பணியிடை நீக்கம் ச...
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை
கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா்.
தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கட்டுமாவடி முதல் தம்பிக்கோட்டை வடகாடு வரை உள்ள 27 கடற்கரை கிராமங்களில் சாகா் கவாச் பணி புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நடைபெறுகிறது. பட்டுக்கோட்டை கடலோரப் பாதுகாப்புக் குழும டி.எஸ்.பி முருகன் தலைமையிலான 5 ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று கண்காணித்து வருகின்றனா். மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு, கள்ளிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.