செய்திகள் :

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

post image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வத்திடம் கூட்டமைப்பின் நிறுவன தலைவா் ராஜா சீனீவாசன் தலைமையில் மாவட்டச் செயலா் அப்துல் நசீா், நகரத் தலைவா் சதீஷ், மருத்துவக் கல்லூரி பகுதி வணிகா் சங்கத் தலைவா் முத்துராமன், செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை அளித்த மனு:

தமிழகத்தில் வேறு எந்த மருத்துவக் கல்லூரியிலும் இல்லாத அளவுக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் அனுமதி பெறப்பட்ட பொருள்களை மட்டுமல்லாமல், அனைத்து வகையான உணவு பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்கப்படுகின்றன.

மருத்துவமனை வளாகத்துக்குள் ஒப்பந்த அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் பல பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவமனைக்கு வெளியே வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள் வாடகை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனா். இதனால் 100-க்கும் அதிகமான வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், மது போன்றவையும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தமிழ்ப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முத... மேலும் பார்க்க

காலமானாா் சா. ஜீவபாரதி

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி சா. ஜீவபாரதி (71) உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா். தஞ்சை மாவட்ட கடலோரப் ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம் போனது. தஞ்சாவூா் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில... மேலும் பார்க்க