செய்திகள் :

முதல்வர் அதிமுகதான்; ஆனால் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா

post image

தமிழ்நாட்டில் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தலுக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் தற்போது இந்த தேர்தலில் மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமையின்கீழ் கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வருகிறது. 'கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சி இல்லை' என அதிமுக கூறுகிறது.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்திய பேட்டியொன்றில்,

"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்.

தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்பட்சத்தில் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதேபோல அதிமுகவில் யாரையும் நாங்கள் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களின் உள்கட்சி விவகாரம். எனவே, அவர்கள் தங்களாகவே முடிவெடுத்துக்கொள்ளட்டும்" என்று பேசியுள்ளார்.

Minister Amit Shah has said that the National Democratic Alliance will definitely form the government in Tamil Nadu and BJP will be a part of it.

அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்... மேலும் பார்க்க

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக அண்மையில் மதுரையில் நடத்தியது உண்மையா... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், சாதி அடையாளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன... மேலும் பார்க்க

அமித்ஷா பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி

அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார் எனவும் தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?

நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ் ஆப் குழுவில், சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது குழுவிடம் இருந்து போதைப் பொருள் வாங... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு ஐஐடி வளாகத்தில் நடந்துசென்றபோது மாணவியிடம் கட்டையைக் காட்டி மிரட்டி, அவரின் முடியைப் பிடித்து ... மேலும் பார்க்க