செய்திகள் :

போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?

post image

நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ் ஆப் குழுவில், சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது குழுவிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் தமிழ் திரை நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவின் செல்போனை கைப்பற்றி சைபர் போலீஸார் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவரது செல்போனில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்டு வாட்ஸ் ஆப் குழுக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போதும, வாட்ஸ் ஆப்பில் கிருஷ்ணா அவரது நண்பர்களுடன் போதைப் பொருள் தொடர்பான விவரங்களை கோட் வேர்டில் பேசியதும், மேலும் வாட்ஸ் ஆப் குழுக்களில் நேரம், இடம் ஆகியவற்றை பகிர்ந்து போதைப் பொருளை பயன்படுத்தி வந்ததும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் 10 நபர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்கள் மற்றும் திரை உலக நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இந்த வாட்ஸ்ஆப் குழு மூலமாக பல்வேறு போதைப் பொருள் விருந்துகளை நடத்தி வந்துள்ளனர்.

இதனால், அந்த குழுவில் இருந்த மற்றவர்களும் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பார்கள் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பி நேரடியாக வரவைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த விசாரணையின் மூலம் அவர்கள் வேறு யாருக்காவது போதைப் பொருள்களை விற்பனை செய்து உள்ளார்களா அல்லது அவர்களுடன் இணைந்து வேறு யாராவது பயன்படுத்தி உள்ளார்களா என்பது தெரியவரும் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாத், பிரதீப், மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோரையும் போலீஸ் காவாலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

It has been revealed that a WhatsApp group related to drugs on actor Krishna's cell phone includes film celebrities.

இதையும் படிக்க: சென்னை ஐஐடியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!

அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலர்கள் மாற்றம்

அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு! அமித் ஷா மீண்டும் வாக்குறுதி!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், நயினார் நாக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்... மேலும் பார்க்க

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக அண்மையில் மதுரையில் நடத்தியது உண்மையா... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், சாதி அடையாளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன... மேலும் பார்க்க

அமித்ஷா பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி

அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார் எனவும் தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத்... மேலும் பார்க்க