செய்திகள் :

திருச்செந்தூர்: கப்பலில் தவறி விழுந்த பணியாளர்; குணமானதும் வெள்ளி வேல் காணிக்கை செலுத்திய உரிமையாளர்

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.  

அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் அங்கப்பிரதட்சணம், காவடி, பால்குடம், துலாபாரம், காணிக்கை செலுத்துதல், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களையும் செலுத்துவார்கள். 

வெள்ளி வேல்
வெள்ளி வேல்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த பணியாளர் உடல் நலம் பெற வேண்டி 7 அடி உயர வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜய். 24 வயதான இவர், துருக்கியில் இருந்து இத்தாலி நாட்டிற்கு இயக்கப்பட்டு வரும் கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துருக்கி நாட்டில் கப்பலில் பணியில் இருந்த போது அஜய், எதிர்பாராத விதமாக கப்பலின் மேல் தளத்தில் இருந்து தவறி தரைத்தளத்தில் விழுந்தார்.

இதில் அஜய்யின் கை, கால், முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் படுகாயம் அடைந்த அஜய் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் பாதிப்பு அடைந்தார்.

7 அடி உயர வெள்ளி வேல்
7 அடி உயர வெள்ளி வேல்

 45 நாட்களுக்கு மேலாக துருக்கி நாட்டில் அஜய்க்கு மருத்துவம் பார்த்த கப்பலின் உரிமையாளர், அஜய்யின்  உடல் நலம் சரியானதும் திருச்செந்தூர் முருகனுக்கு 7 அடி உயரத்தில் வெள்ளியால் வேல் செய்து அஜய்யின் கைகளாலேயே முருகன் சன்னதியில் ஒப்படைப்பதாக வேண்டியிருந்தாராம். இந்த நிலையில், தற்போது அஜய் முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

இதையடுத்து அஜய், தன்னுடன் துருக்கி நாட்டில் வேலை பார்த்த நாகர்கோவிலைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்தார்.

7 அடி உயரத்தில் ’ஓம்’ எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கிலோ எடை உடைய 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளியால் ஆன வேலுடன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலின் வெளிபிரகாரத்தில் வேலுடன் சுற்றி வந்த அஜய்யை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

குடும்பத்தினருடன் அஜய்
குடும்பத்தினருடன் அஜய்

அதைத் தொடர்ந்து அஜய், வேலுடன் கோயிலுக்குள் சென்று முருகன் சன்னதியில் வைத்து வேண்டிக்கொண்டு அதன்பின் திருக்கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

தனது பணியாளரின் உடல் நலம் பெற வேண்டி கப்பல் உரிமையாளர், திருச்செந்தூர் முருகனுக்கு 7 அடி உயரத்தில் வெள்ளியால் ஆன வேல் வழங்கிய நிகழ்வு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: "நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எ... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்களின் கோரிக்கை என்ன?

நெல்லையில் அடையாளங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்தாண்டு ஆனித் திருவிழா வரும் 30-ம் தேதி க... மேலும் பார்க்க

Chennai: மத்திய கைலாஷ் கோவில் பராமரிப்பு பணிகள்; தளத்தைத் தூக்கும் பணி தொடக்கம் | Photo Album

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada ChennaiJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG B... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் முருகனும் பழமையான கோயில்களும்! - நிறைவான பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; தரிசனம் கிடையாது''

"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருப்பரங்குன்றத்திற்கு புறப்படுவதால் ஜூலை 14 ஆம் தேதி மீனாட்சியம... மேலும் பார்க்க