செய்திகள் :

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்களின் கோரிக்கை என்ன?

post image

நெல்லையில் அடையாளங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில்.

இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்தாண்டு ஆனித் திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

புதிய வடக்கயிறுகள்
புதிய வடக்கயிறுகள்

இதனையொட்டி நெல்லையப்பர் கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களைச் சுத்தப்படுத்தி தேரோட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்டது, சுவாமி நெல்லையப்பரின் தேர். இதன் எடை 450 டன். 82 அடி உயரமும், 28 அடி அகலமும் கொண்டது.

7 அடுக்கு சட்டங்கள் கட்டப்பட்டு தேர் பதாகைகள், தோரண அலங்காரத்துடன் கம்பீரமாக ரத வீதிகளில் தேர்கள் வலம் வரும்.

கடந்தாண்டு தேரோட்டத்தின் போது சுவாமி தேரின் வடங்கள் 4 முறை அறுந்தன. இதனால் பல மணி நேரம் தேரோட்டம் தடைப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து வடங்கள் கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதனையடுத்து சுவாமி- அம்பாள் தேர்களுக்குப் புதிய வடக்கயிறுகள் வாங்கிட பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

வடக்கயிறுகள் பொருத்தும் பணி
வடக்கயிறுகள் பொருத்தும் பணி

இதனையடுத்து ரூ.6.50 லட்சம்  மதிப்பீட்டில் 24 இஞ்ச் சுற்றளவும், 250 அடி நீளமுள்ள 6 வடக்கயிறுகள் வாங்கப்பட்டன. சுவாமி தேருக்கு 4 வடமும், அம்பாள் தேருக்கு 2 வடமும் கொண்டு வரப்பட்டு திருக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தேர்களில் புதிய வடக்கயிறுகள் பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் சொக்கப்பனை முக்கு அருகே சாலை மூடப்பட்டுள்ளது.

போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை டவுனில் இருந்து சந்திப்பு பகுதிக்குச் செல்லும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

புதிய வடக்கயிறுகள் பொருத்தும் பணி
புதிய வடக்கயிறுகள் பொருத்தும் பணி

ஆர்ச் முதல் சொக்கப்பனை முக்கு திரும்பும் பகுதி வரை பாதாள சாக்கடைக்காகக் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதனால், சாலை மேடும் பள்ளமுமாகக் காட்சி அளிக்கிறது. தேரோட்டம் நெருங்கி வரும் நிலையில் தேர் ஓடும் இப்பகுதியில் சாலையைச் சீரமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Chennai: மத்திய கைலாஷ் கோவில் பராமரிப்பு பணிகள்; தளத்தைத் தூக்கும் பணி தொடக்கம் | Photo Album

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada ChennaiJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG B... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் முருகனும் பழமையான கோயில்களும்! - நிறைவான பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; தரிசனம் கிடையாது''

"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருப்பரங்குன்றத்திற்கு புறப்படுவதால் ஜூலை 14 ஆம் தேதி மீனாட்சியம... மேலும் பார்க்க

திருச்செந்தூர் குடமுழுக்கு: கடற்கரை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்; தற்போதைய நிலவரம் என்ன?

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற... மேலும் பார்க்க

`வேதபாராயணம், திருமுறை.. தமிழில் திருச்செந்தூர் குடமுழுக்கு' - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்கடவுள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது.... மேலும் பார்க்க