செய்திகள் :

திருச்செந்தூர் குடமுழுக்கு: கடற்கரை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்; தற்போதைய நிலவரம் என்ன?

post image

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள், ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் கடல் அரிப்பினைத் தடுத்திடும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

வரும் ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

கடற்கரை சமன்படுத்தும் பணி
கடற்கரை சமன்படுத்தும் பணி

இதற்காக ராஜகோபுர வாசல் அருகில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள 76 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 64 ஓதுவா மூர்த்திகளைக் கொண்டு பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகத்திலும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.

ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கிற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், திருச்செந்தூர் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோயிலில் கிரிப்பிரகாரப்பாதை சீரமைப்பு, கடற்கரை சீரமைப்பு, கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

கடற்கரை சமன்படுத்தும் பணி
கடற்கரை சமன்படுத்தும் பணி

18 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிலையம், கோயில் வளாகத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 314 கழிவறைகளுடன் கூடுதலாக 510 கழிப்பிடங்கள், 30 இடங்களில் குடிநீர் வசதிகள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 60 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ட்ரோன்கள் மூலம் 20 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`வேதபாராயணம், திருமுறை.. தமிழில் திருச்செந்தூர் குடமுழுக்கு' - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்கடவுள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயில்: ஆனி மாத பூஜை, கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்! | Photo Album

சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

வேலூர்: 92 அடி உயர தீர்த்தகிரி முருகனுக்கு மகா கும்பாபிஷேகம் - மலை மீது அதிர்ந்த `அரோகரா’ முழக்கம்

வேலூர் சத்துவாச்சாரிக்கு அருகிலுள்ள புதுவசூர் மலைமீது அமைந்திருக்கிறது ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். குன்றின் அடிவாரத்தில் சுபஸ்ரீ விநாயகர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசிக்க... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் 275 ஆண்டுக்குப் பின் இன்று மஹா கும்பாபிஷேகம்!

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மூலவர் அனந்த சயனத்தில் 18 அடி நீளத்தில் காட்சி அருளுகிறார். 12008 சாளக... மேலும் பார்க்க