செய்திகள் :

``தேவைப்படும்போது வீட்டுக்கே வந்து அழைப்பார்கள்" 2015-ல் பயிற்சியாளரிடம் ரிஷப் பண்ட் சொன்ன பதில்

post image

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியிருந்தார்.

அடுத்த போட்டி ஜூலை 2-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் 2015-ல் டெல்லி ரஞ்சி அணியில் இடம்பிடிப்பதற்கு கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் டெல்லி அணியின் பயிற்சியாளரிடம் அவர் கூறியது குறித்து, அந்தப் பயிற்சியாளரே பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அன்று நடந்த நிகழ்வை விவரித்த டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஜய் ஜடேஜா, "எங்கள் இருவரின் முதல் சந்திப்பை நான் மறக்கவே மாட்டேன்.

2015-ல் டெல்லி அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து நான் விலகுவதற்கு முன், தேர்வுக்குழுவினரும், கேப்டனும் அணிக்கு யார் யார் வேண்டும் என்று ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். அதில், பண்ட் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும், ரஞ்சி டிராபிக்கான பயிற்சியில் கலந்துகொள்ளமாறு பண்ட்டிடம் சொன்னேன். `எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும். இப்போது தேர்வுசெய்யப்படவில்லை என்பது ஒரு விஷயமல்ல' என்றேன்.

அதற்கு அவர், "அது இருக்கட்டும், அவர்களுக்கு நான் தேவைப்படும்போது என்னை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்வார்கள்" என்று என்னிடம் கூறினார்" என விவரித்தார்.

அஜய் ஜடேஜா
அஜய் ஜடேஜா

அதே ரஞ்சி சீசனில் மேற்கு வங்கத்துக்கான எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பண்ட்டுக்கு கிடைத்தது.

முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த பண்ட் இதுவரை மொத்தமாக 70 முதல்தர போட்டிகளில் ஒரு முச்சதம் உள்பட 47 ஆவரேஜில் 5,138 ரன்களை பண்ட் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`2024 T20 WC பைனலில் அவரைப் பெரிதாக யாரும் பேசுவதில்லை’ - நோ கோலி, பும்ரா; ரோஹித் கூறும் வீரர் யார்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அடுத்த ஆண்டே, டி20 உலகக் கோப்பையை வென்றது.அந்த இறுதிப்போட்டியில் கடைசி 24 பந்துகளில் வெறும்... மேலும் பார்க்க

TNPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் | Photo Album

TNPL-2025:நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?ச... மேலும் பார்க்க

Rishabh Pant: ``20 முறை அவுட்டாகப் பார்த்தார்'' - துணிச்சலான பேட்டிங் ஸ்டைல் குறித்து ஏபிடி ஓபன்!

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னைச் சிறந்த பேட்ஸ்மேனாக நிலை நிறுத்தியுள்ளார் இந்தியாவின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டி... மேலும் பார்க்க

"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வருந்தும் பிரித்வி

இந்திய கிரிக்கெட்டில் சேவாக்கை போல ஒரு முத்திரை பதிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா.2018-ல் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சாம்பிய... மேலும் பார்க்க

ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், பிட்ச் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்தும், 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்திருக்கிறது இந்தியா.148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில... மேலும் பார்க்க

TNPL-2025: சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி| Photo Album

TNPL-2025: மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி.! மேலும் பார்க்க