செய்திகள் :

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை!

post image

யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், தற்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் முகாமிட்டுள்ளது.

இதனால் வனத்துறையினர் தீவிரமாக யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tourists have not been allowed in tourist places in Kodaikanal due to elephant encampment.

போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?

நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ் ஆப் குழுவில், சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது குழுவிடம் இருந்து போதைப் பொருள் வாங... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு ஐஐடி வளாகத்தில் நடந்துசென்றபோது மாணவியிடம் கட்டையைக் காட்டி மிரட்டி, அவரின் முடியைப் பிடித்து ... மேலும் பார்க்க

கூட்டணியில் முதல்வர் பதவி யாருக்கு? தவெகவுடன் கூட்டணியா? - ராஜேந்திர பாலாஜி பதில்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று(வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய அவ... மேலும் பார்க்க

முதல்வர் அதிமுகதான்; ஆனால் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா

தமிழ்நாட்டில் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்... மேலும் பார்க்க

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை! - ரயில்வே இணை அமைச்சர்

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார்.மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்த... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த சில நாள்கள் அருவிகளில் குளிக... மேலும் பார்க்க