10 இயக்குநர்களுடன் 10 படங்கள்! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு!
Koomapatti: ``கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா'' - விருதுநகர் ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலானது விருதுநகர் மாவட்ட கூமாபட்டி கிராமம். ஆனால் உண்மையில் அந்த கிராமத்தில் ஆறுகள் வறண்டு இருப்பதாகவும், இணையத்தில் பரவுவது பழைய வீடியோவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வைரலான வீடியோவில் காட்டப்படும் அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன், ``கூமாபட்டி போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள இடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!" என அவரின் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, புதிதாக விருதுநகர் கலெக்டராக பதவியேற்றிருக்கும் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ``தமிழ்நாடு முதலமைச்சரின், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.