செய்திகள் :

ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்! மக்கள் பீதி!

post image

அகமதாபாத் ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகளால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.

புகழ்பெற்ற ஜெகந்நாதரின் ரத யாத்திரை ஒடிசாவின் புரி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் 148-ஆம் ஆண்டு ஜெகந்நாதரில் ரத யாத்திரையில் அம்மாநில முதல்வர் பூபேந்திர பாட்டீல் விழாவில் கலந்து கொண்டு தலைமை வகித்தார். அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் ரத யாத்திரை பங்கேற்பதற்காக குவிந்தனர்.

ஜமால்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் மங்கல ஆரத்தியுடன் விழா தொடங்கியது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும், அங்கிருந்த துறவிகள் மற்றும் ஞானிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

காதியா பகுதியில் ரத யாத்திரையின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலமும் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த இளைஞர் அதீத சப்தம் மற்றும் விசில் ஒலி எழுப்பியதால், திடீரென ஒரு யானை மிரண்டு அங்கிருந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி ஓடியது. இந்த விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனைக்கண்டு அங்கு குழுமியிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதோடு மேலும், 2 யானைகளும் ஓடின. யானைகள் தாக்கியதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 18 யானைகளில், தறிகெட்டு ஓடிய மூன்று யானைகள் பாகன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

22 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த தேர் யாத்திரை இரவு முடிவடையும் என்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல் துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரித்வார், அயோத்தி, நாசிக், உஜ்ஜைன், ஜகந்நாதபுரி மற்றும் சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த 2,500 துறவிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

Chaos broke out during the Jagannath Rath Yatra in Ahmedabad on Thursday after a group of elephants accompanying the procession went out of control and trampled several people.

இதையும் படிக்க... புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை கோலாகலம்!

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க

அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்த... மேலும் பார்க்க

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத... மேலும் பார்க்க

அதிகளவில் நீர்ப் பயன்பாடு! விவசாயத்துக்கும் வரி விதிக்கும் மத்திய அரசு?

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய மலைக் கோட்டை!

மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திடீர், திடீரென இணையத்தில் வைரலாகும் இடங்கள... மேலும் பார்க்க