மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் திருவாதிரை திருவிழா
மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு திருவாதிரை திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூரில் வடக்காஞ்சி என அழைக்கப்படும் 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் வளாகத்தில் ராமானுஜருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ராமானுஜருக்கு ஆனி மாத திருவாதிரை சிறப்பு அபிஷேக வழிபாடு ஆராதனை நடைபெற்றது. இதனை தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ராமானுஜா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.