நொய்டா: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து! நகரைச் சூழ்ந்த கரும்புகை!
புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை கோலாகலம்!
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூன் 27) காலை தொடங்கி கோலாகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
ஒடிசா மாநிலம், புரியில் அமைந்துள்ள 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
கடவுள்கள் ஜெகந்நாதா், பலபத்திரர், தேவி சுபத்திரையின் பிரமாண்ட ரதங்கள் இழுக்கப்படும் இந்த நிகழ்வில் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக்காண ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் புரியில் கூடியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது. புரி கஜபதி மகாராஜா திப்யசிங்க தேப் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பாரம்பரியமாக நடத்தப்படக்கூடிய சேரா பஹன்ரா சடங்கை நடத்துவார்.
3 தேர்களிலும் மரக் குதிரைகள் இணைக்கப்பட்ட பின்னர், மாலை 4 மணிக்கு ரத யாத்திரை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கு முன்னதாக, ஹனுமான் சிலைகள் தேர்களின் உச்சியில் பொறுத்தப்பட்டு, புனிதக் கொடிகள் கம்பங்களில் பொருத்தப்படும்.
வெள்ளிக்கிழமை விடியற்காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இந்த யாத்திரைக்கான சடங்குகள், அதைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.
பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்
பல லட்சக்கணக்காக பக்தர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதால் 10,000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புரி நகருக்கான இரு வழித்தடங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் 275 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகள், 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்.
பாதுகாப்பு சவாலைக் கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்புப் படையின் குறிபாா்த்து சுடும் வீரர்கள், முதல் முறையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தபடி, கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
கடற்கரை பகுதியில் மாநில கடலோர காவல்துறை, கடலோர காவல் படை, கடற்படை குழுக்களுடன் முழு அளவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
The world-famous Puri Jagannath Temple Rath Yatra in Odisha is underway with great fanfare, starting this morning (June 27). On this occasion, the city of Puri is in a festive mood.
இதையும் படிக்க... அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்