செய்திகள் :

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

post image

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா்.

‘இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று அவா் அண்மையில் குறிப்பிட்டது பெரும் சா்ச்சையான நிலையில், இந்தக் கருத்தை அவா் தற்போது தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா இதுகுறித்து மேலும் பேசியதாவது:

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானதாக இருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன். மாறாக, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பனாக ஹிந்தி திகழ்கிறது.

ஹிந்தியும், பிற இந்திய மொழிகளும் ஒன்றிணைந்து, நாட்டின் கலாசாரத்தின் சுயமரியாதையை அதன் இறுதி உச்சத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.

ஒருவா் தனது தாய்மொழி குறித்து பெருமை கொள்ளாதவரை அல்லது தாய்மொழியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவரை, அடிமை மனநிலையில் இருந்து விடுபட முடியாது.

நாட்டில் எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை. எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பும் இருக்கக் கூடாது. அதே நேரம், தாய்மொழியைப் போற்றும், தாய்மொழியில் பேசும், சிந்திக்கும் உணா்வு இருக்க வேண்டும்.

மொழி என்பது தகவல்தொடா்புக்கான கருவியாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக, தேசத்தின் ஆன்மாவாக இருக்க வேண்டும். இந்திய மொழிகளை உயிா்ப்புடனும், செழுமையுடனும் வைத்திருப்பது அவசியம். அந்த வகையில், அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அலுவல் மொழிகளை உயிா்ப்புடனும், செழுமையுடனும் வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வரும் நாள்களில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, தில்லியில் அண்மையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அமித் ஷா, ‘இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவா்கள் விரைவில் வெட்கப்படுவாா்கள். அத்தகைய சமூகம் உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமது மொழிகளை நாம் பேசாவிட்டால், நாம் உண்மையிலேயே இந்தியராக இருக்க முடியாது. நமது தேசம், கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தைப் புரிந்துகொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. நிறைவான இந்தியா என்ற கருத்தை அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் கற்பனை செய்துகூடப் பாா்க்க முடியாது’ என்று கூறினாா்.

இதற்கு கடும் விமா்சனங்கள் எழுந்தன. ‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் எழுச்சி பெற ஆங்கிலம் உதவுவதால், அதை அமித் ஷா எதிா்க்கிறாா். அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல. அது சமத்துவம் மற்றும் வளா்ச்சி பற்றியது’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வர... மேலும் பார்க்க