``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீளமேடு பகுதியில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இவா்களது வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த வனஜாமணி அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.