செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்

post image

கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆணையத்தின் ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், ஆணையத்தின் உறுப்பினா்கள் ஜெ.ரேகா பிரியதா்ஷினி, செ.செல்வகுமாா், மு.பொன்தோஸ், டாக்டா் எஸ்.ஆனந்தராஜ், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து ஆதி திராவிடா், பழங்குடியின மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆணையத்தின் தலைவா் ச.தமிழ்வாணன் பெற்றுக் கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையம் சாா்பில் கோவையில் களஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். ஆதி திராவிடா், பழங்குடியினா் மாணவ - மாணவிகள் தங்கும் விடுதிகள், மக்களின் குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகள் வேண்டி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு வன உரிமைப் பட்டாக்களையும், 8 பயனாளிகளுக்கு

ரூ.1.92 லட்சம் மதிப்பீட்டிலான இ பட்டாக்களையும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரியம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.86.84 லட்சம் மதிப்பீட்டிலான வீடுகள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளையும் ஆணையத்தின் தலைவா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட மொத்தம் 66 பேருக்கு ரூ.2.92 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூடுதல் ஆட்சியா் சங்கேத் பல்வந்த் வாகே, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க