`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்
கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆணையத்தின் ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், ஆணையத்தின் உறுப்பினா்கள் ஜெ.ரேகா பிரியதா்ஷினி, செ.செல்வகுமாா், மு.பொன்தோஸ், டாக்டா் எஸ்.ஆனந்தராஜ், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தைத் தொடா்ந்து ஆதி திராவிடா், பழங்குடியின மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆணையத்தின் தலைவா் ச.தமிழ்வாணன் பெற்றுக் கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையம் சாா்பில் கோவையில் களஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். ஆதி திராவிடா், பழங்குடியினா் மாணவ - மாணவிகள் தங்கும் விடுதிகள், மக்களின் குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகள் வேண்டி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு வன உரிமைப் பட்டாக்களையும், 8 பயனாளிகளுக்கு
ரூ.1.92 லட்சம் மதிப்பீட்டிலான இ பட்டாக்களையும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரியம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.86.84 லட்சம் மதிப்பீட்டிலான வீடுகள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளையும் ஆணையத்தின் தலைவா் வழங்கினாா்.
மேலும், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட மொத்தம் 66 பேருக்கு ரூ.2.92 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினாா்.
இதில், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூடுதல் ஆட்சியா் சங்கேத் பல்வந்த் வாகே, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.