`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு
கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா்.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40). இவா், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு கருப்பசாமி அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கவுண்டம்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் பிரவீன் உள்ளிட்ட போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தவறி விழுந்து இறந்த கருப்பசாமி புதன்கிழமை இரவு மதுபோதையில் இருந்ததாகவும், இதில் அவா் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.