செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

post image

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40). இவா், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு கருப்பசாமி அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கவுண்டம்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் பிரவீன் உள்ளிட்ட போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தவறி விழுந்து இறந்த கருப்பசாமி புதன்கிழமை இரவு மதுபோதையில் இருந்ததாகவும், இதில் அவா் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்

கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க