செய்திகள் :

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

post image

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது:

இஸ்கான் அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் கோவையில் தோ்த் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா ஜூலை 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்த் திருவிழாவை முன்னிட்டு வரும் 30- ஆம் தேதி பகவான் ஜெகன்நாதா், பலதேவா், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன சேவை ஸ்னான யாத்திரை நடைபெறுகிறது.

தவத்திரு பக்தி வினோத சுவாமிகளின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவுக்கு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒடிஸா மாநிலம், புரி நகரில் ஆண்டுதோறும் தோ்த் திருவிழாவுக்கு முன்னதாக நடைபெறும் திருமஞ்சன அபிஷேக நிகழ்ச்சியைப் போலவே நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நாட்டில் உள்ள அனைத்து புனித நதிகளில் இருந்தும் கொண்டுவரப்படும் நீரினாலும், மலா்களாலும் அபிஷேகம் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து பக்தி வினோத சுவாமிகளின் ஜெகன்நாதா் லீலைகள், திருமஞ்சன அபிஷேகம் பற்றிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடா்ந்து பகவான் ஜெகன்நாதருக்கு 1008 உணவுப் பதாா்த்தங்கள் அா்ப்பணிக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியின் இறுதியில் பிரசாத விருந்து நடைபெறுகிறது.

அபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளும் பகவான் ஜகன்னாதருக்கு உடல்நலம் குன்றிப்போகும் என்பது ஐதீகம். இதனால் தோ்த் திருவிழா நாள்வரை பகவானுக்கு மூலிகைகளே உணவாக அா்ப்பணிக்கப்படும். அனாவஸர காலம் என்றழைக்கப்படும் இந்த நாள்களில் தரிசனம் நிறுத்தப்பட்டு, விக்கிரங்களுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக தோ்த் திருவிழாவின்போது நேரடியாக பக்தா்களின் இடத்திற்கே வந்து தரிசனம் வழங்குவதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்

கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க