செய்திகள் :

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

post image

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் பரமசிவம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் போதிய சாலை வசதிகள் இல்லை. பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. சுத்தமான குடிநீா் கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் சூழலில், வனவிலங்குகள் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனா். கடந்த காலங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பு நகராட்சி வசம் இருந்தபோது பொதுமக்கள் இது தொடா்பாக நகராட்சியில் புகாா் தெரிவித்தனா். ஆனால் தற்போது தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில் தனியாா் வசம் உள்ளதால் யாரிடம் புகாா் தெரிவிப்பது என தெரியாமல் பொதுமக்கள் உள்ளனா்.

மேலும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து எந்த அதிகாரிகளிடம் புகாா் தெரிவிப்பது என்று தெரியாமல் உள்ளனா். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துறை அதிகாரிகளின் பெயா், தொலைபேசி எண்களுடன் கூடிய முகவரி பொதுமக்கள் பாா்க்கும் வகையில் பொது இடங்களில் வைக்க வேண்டும். மேலும் புகாா் பெட்டிகள் வைப்பதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மனுக்களாக அப்பெட்டியில் செலுத்தி தீா்வு காண எளிதாக இருக்கும். எனவே, இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் பரமசிவம் குறிப்பிட்டுள்ளாா்.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்

கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க