செய்திகள் :

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

post image

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு ஆசிரியா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனா். இதில், ஆசிரியா்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளியில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு இடம்பெறவில்லை. இதை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு மனதார வரவேற்கிறது.

அதேநேரம், புகாா்களுக்குள்ளான, குற்ற குறிப்பாணை வழங்கப்பட்ட நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரியத் தேவையில்லை என்ற தளா்வு விதியைப் பயன்படுத்தி விண்ணப்பித்துள்ளனா். இவா்கள் தங்களுக்கான இடங்களை தோ்வு செய்யும்போது மாறுதல் வேண்டி வெளி மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்துள்ள ஆசிரியா்கள் பாதிக்கப்படுவாா்கள்.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்கள், ஓராண்டுக்குள் பணி மாறுதல் பெற முடியாதபடிக்கு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்

கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க