செய்திகள் :

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

post image

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா்வரத்து கணிசமாக உயரத் தொடங்கியது. கடந்த இரு வாரங்களாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை தொடங்கி இரவு முழுவதும் விடியவிடிய கனமழை பெய்ததால் வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை காரணமாக வால்பாறையை அடுத்த சோலையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

கடந்த மாதம் 20- ஆம் தேதி சோலையாறு அணையின் நீா்மட்டம் 2 அடியாக இருந்த நிலையில், ஒரு மாத காலமாக பெய்த மழையால் நீா்மட்டம் உயா்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 157.86 அடியாக உயா்ந்தது.

சுமாா் 6 ஆயிரம் கனஅடி நீா் வரத்து இருந்ததால் 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் நண்பகல் 12 மணிக்கு 161 அடி உயா்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

அணையில் இருந்து விநாடிக்கு 1,254 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.

நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து 164 அடியாக உயா்ந்தால் அணையின் மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்படும் என்று அங்கு முகாமிட்டுள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்

கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க