செய்திகள் :

"சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை" - உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ வழக்கு

post image

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான டி.எஸ்.ஆர்.வெங்கட்ரமணா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

மாநிலங்களில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் இவ்வாறு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது சட்ட விரோதம், இது அரசியலமைப்பிற்கு எதிரானது. தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசின் பட்டியலில் உள்ளது, ஏற்கனவே சாலை பராமரிப்புக்காகப் பல்வேறு வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வேங்கடரமணா, "தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில், இது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "தடையற்ற பயணத்திற்காகத்தான், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு சுங்க சாவடியிலும் வாகனங்கள் கடந்து செல்வதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதற்கு மாற்று வழி கிடையாதா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"எங்களால்தான் உடை அணிகிறீர்கள்" - பாஜக எல்எல்ஏ சர்ச்சை பேச்சு; மகாராஷ்டிராவில் வலுக்கும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் தேர்... மேலும் பார்க்க

``அரசியலமைப்புலிருந்து 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற சொற்கள் நீக்க வேண்டும்" - RSS பொதுச் செயலாளர்

ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. பா.ஜ.க தலைமையிலான ம... மேலும் பார்க்க

`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின் பதிலென்ன?

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். மேலும், அவரின் குடியரசு கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஜே.டி. வான்ஸும் வெற்றிபெற்ற... மேலும் பார்க்க

Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss!| Elangovan Explains

'கலைஞரிடம், ஸ்டாலின் இருந்தது போல இருக்க வேண்டும். என் மூச்சிருக்கும் வரை, நான்தான் பாமக தலைவர்' என அதிரடி காட்டியுள்ளார் ராமதாஸ். இந்தளவுக்கு கோபப்படுவதற்கு பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக சொல்கிறா... மேலும் பார்க்க

Ramadoss-ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect Show 26.6.2025

* கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ - இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்* ''கலைஞர் பாணியில் நான்... ஸ்டாலின் பாணியில் அன்புமணி'' - ராமதாஸ்* MLA ARUL பதவியை பறித்த அன்புமணி?* "20... மேலும் பார்க்க