போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?
Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த பிராமணப் பத்திரம்!
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், 2022-ம் ஆண்டு ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சடங்கு செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து, கேரள யுக்திவாதி சங்கம் 'கேரள மாநிலத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் பெயரில் நடத்தப்படும் தீங்கு விளைவிக்கும் சடங்குகளைத் தடைசெய்ய மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இயற்றப்பட்டதைப் போன்ற ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்.

இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் தலைமையிலான சட்ட சீர்திருத்த ஆணையம், 2019-ம் ஆண்டில் கேரள மாநிலத்திற்கு புதிய சமூக நிலைமைகளின் அடிப்படையில், சட்டமன்ற பரிந்துரைகளுடன் ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் இதுவரை, இந்த விஷயத்தில் மாநிலத்தின் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை" என பொது நல வழக்கு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த கேரள மாநில உயர் நீதிமன்றம், ``சூனியம் போன்ற தீயசக்திகளுக்கு எதிராக நடத்தப்படுவதாகக் கூறப்படும் செயல்பாடுகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பது குறித்து மாநில அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், கேரள தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன், கேரள உள்துறை ஜூன் 21, 2025 அன்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ``ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் கமிஷன் சட்ட சீர்திருத்த ஆணைய அறிக்கை, சூனியம் மற்றும் தொடர்புடைய மனிதாபிமானமற்ற நடைமுறைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற பரிந்துரைத்திருந்தது.கேரள உயர் நீதிமன்றம்

அதன் அடிப்படையில், ‘கேரளா மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள், சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா, 2022’ என்ற வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. இருப்பினும், விவாதங்களுக்குப் பிறகு, ஜூலை 5, 2023 அன்று அமைச்சரவை இந்த சட்டத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்தது. அதற்குப் பிறகு அந்த சட்ட சீர்திருத்த அறிக்கையின் மீது எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சூனியம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற நடைமுறைகளைத் தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றப் போவதில்லை" என நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறது.