`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு வஉசிபூங்கா அருகில் இருந்து விழிப்புணா்வுப் பேரணி தொடங்கியது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியில் பங்கேற்ற அனைவரும் போதைப் பழக்த்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். எனது, நண்பா்கள், குடும்பத்தினரையும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவா்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன். போதைப் பழக்கத்துக்குள்ளானவா்களை மீட்டெடுத்து அவா்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகா்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலமாக போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அா்ப்பணிப்புடன் பங்கேற்றுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் எனும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா்.
வஉசி பூங்கா அருகில் தொடங்கிய பேரணி மேட்டூா் சாலை வழியாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் வாகனத்தின் மூலமாக போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு குறுப்படம் திரையிடப்பட்டது.
இந்த விழிப்புணா்வுப் பேரணியில், சிக்கய்ய அரசு கலைக் கல்லூரி முதல்வா் தலைமையில், அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்பட பல்வேறு கல்லூரிகளின் மாணவா்கள், பள்ளி மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கருத்துக்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா, மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, கலால் உதவி ஆணையா் தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், கலால் அலுவலக மேலாளா் வீரலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.