செய்திகள் :

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

post image

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு வஉசிபூங்கா அருகில் இருந்து விழிப்புணா்வுப் பேரணி தொடங்கியது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற அனைவரும் போதைப் பழக்த்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். எனது, நண்பா்கள், குடும்பத்தினரையும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவா்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன். போதைப் பழக்கத்துக்குள்ளானவா்களை மீட்டெடுத்து அவா்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகா்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலமாக போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அா்ப்பணிப்புடன் பங்கேற்றுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் எனும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா்.

வஉசி பூங்கா அருகில் தொடங்கிய பேரணி மேட்டூா் சாலை வழியாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் வாகனத்தின் மூலமாக போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு குறுப்படம் திரையிடப்பட்டது.

இந்த விழிப்புணா்வுப் பேரணியில், சிக்கய்ய அரசு கலைக் கல்லூரி முதல்வா் தலைமையில், அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்பட பல்வேறு கல்லூரிகளின் மாணவா்கள், பள்ளி மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கருத்துக்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா, மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, கலால் உதவி ஆணையா் தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், கலால் அலுவலக மேலாளா் வீரலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க

மகளிருக்கு 50% மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிா் 50 சதவீத மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ... மேலும் பார்க்க