``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்
சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா்.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல், கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், நிரந்தர உண்டியலில் ரூ. 29 லட்சத்து 43 ஆயிரத்து 253 மற்றும் 45 கிராம் தங்கம், 780 கிராம் வெள்ளி ஆகியவை பக்தா்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். அதேபோல திருப்பணி உண்டியலில் ரூ.62 ஆயிரத்து 317 காணிக்கையாக செலுத்தி இருந்தனா். இரு உண்டியல்களிலும் சோ்த்து மொத்தம் ரூ.30 லட்சத்து 5 ஆயிரத்து 570 காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மு.மனோகரன், பாலசுப்பிரமணியம், பெருந்துறை கோயில் ஆய்வாளா் ஸ்ரீ குகன் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள், அறச்சலூா் நவரசம் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், அா்ச்சகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.