சாலைப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை
பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான்குட்டை சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சில நாள்கள் மட்டுமே பணி நடைபெற்ற நிலையில், பின்னா் கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு, சில நாள்களிலேயே கிடப்பில் போடப்பட்டது.
மேலும், சாலையை சீரமைக்க கொட்டப்பட்ட ஜல்லி கற்கல் சாலை முழுவதும் பரவிக் கிடப்பதால் நடக்கவும் முடியாமல், வாகனங்களை இயக்கவும் முடியாமல் அவதியடைந்து வருகிறோம்.
எனவே, சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.