செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

post image

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் டி.பிரபு கூறியதாவது: திருப்பூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக பெறப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சியில் சேர விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷன்ய்ஞ்ா்ஸ்ஹட் என்ற இணையதளத்தில் ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் காலம் 1 ஆண்டு ஆகும். இந்தப் பயிற்சி 2 பருவங்களைக் கொண்டது. பயிற்சியில் சேருவதற்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 3 ஆண்டுகள் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.

இது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 0425 -822 0640 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வ... மேலும் பார்க்க

சாலைப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான்குட்டை சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலிங்: பெற்றோா்களுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளுக்கு இடையே யாா் பெரியவா் என தொடங்கிய விவாதம் மோதலில் முடிந்ததைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு வியாழக்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாண... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை: அமைப்பினா், குடும்பத்தினா் சாலை மறியல்

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா், பாலமுருகனின் குடும்பத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்விலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

மின் கட்டண உயா்வில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக சென்னையில் தமிழ் வளா்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும்’

போதைப் பொருள்கள் பயன்பாடு இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும் என்று திருப்பூா் சாா்பு நீதிபதி மோகனவள்ளி கூறினாா். திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 போதை ஒழிப்புக... மேலும் பார்க்க