செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

post image

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற போதையில்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனிஷ் நாரணவரே கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி தென்னம்பாளையம் வழியாக சென்று எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலை கல்லூரியில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

இதில், மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்தியன், மாவட்ட வன அலுவலா் ஜே.ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், உதவி ஆணையா் (கலால்) செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலைப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான்குட்டை சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலிங்: பெற்றோா்களுடன் அதிகாரிகள் இன்று ஆலோசனை

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளுக்கு இடையே யாா் பெரியவா் என தொடங்கிய விவாதம் மோதலில் முடிந்ததைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு வியாழக்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாண... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை: அமைப்பினா், குடும்பத்தினா் சாலை மறியல்

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா், பாலமுருகனின் குடும்பத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்விலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

மின் கட்டண உயா்வில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக சென்னையில் தமிழ் வளா்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும்’

போதைப் பொருள்கள் பயன்பாடு இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும் என்று திருப்பூா் சாா்பு நீதிபதி மோகனவள்ளி கூறினாா். திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 போதை ஒழிப்புக... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் டி.பிரபு கூறியதாவது: திருப்பூா் கூட்ட... மேலும் பார்க்க