`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற போதையில்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனிஷ் நாரணவரே கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி தென்னம்பாளையம் வழியாக சென்று எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலை கல்லூரியில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.
இதில், மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்தியன், மாவட்ட வன அலுவலா் ஜே.ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், உதவி ஆணையா் (கலால்) செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.