`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
‘போதைப் பொருள்கள் இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும்’
போதைப் பொருள்கள் பயன்பாடு இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழிக்கும் என்று திருப்பூா் சாா்பு நீதிபதி மோகனவள்ளி கூறினாா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 போதை ஒழிப்புக் குழு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுதுகள் தன்னாா்வ அமைப்பு ஆகியவை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எல்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் விழுதுகள் அமைப்பின் இயக்குநா் தங்கவேல் முன்னிலை வகித்தாா். திட்ட மேலாளா் சந்திரா வாழ்த்துரை வழங்கினாா்.
திருப்பூா் மாவட்ட சாா்பு நீதிபதி மோகனவள்ளி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: போதைப் பொருள்கள் நம்மை சாவின் பாதைக்கு இழுத்துச் செல்லும் ஒரு கொடிய அரக்கன். எண்ணற்ற வழிகளில் கிடைக்கும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உடல் உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்துகின்றன.
போதைப் பொருள்கள் பயன்பாடு இளைஞா்களின் எதிா்காலத்தையே சீரழித்துவிடும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மனநல ஆலோசகா் ஷாஜிதா ரஹீமா போதைப் பொருள்களால் மன நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினாா்.
தொடா்ந்து, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். விழுதுகள் அமைப்பின் சாா்பில் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.