செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வருக்கு தோல்வி பயம் - வானதி சீனிவாசன்

post image

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதி ஆணையப் பரிந்துரைப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதியைப் பகிா்ந்தளித்து வருகிறது. இதில் எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய அரசை எப்போதும் குறைகூறிக் கொண்டே இருக்கிறாா்.

கடந்த 22-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் திரண்டதால், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியலுக்காக, மத அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கு மதத்தைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. ஹிந்து மதத்தையும், கடவுள்களையும் கேலி பேசும் திமுக மதவாதம் பற்றி பேச என்ன உரிமை உள்ளது. இதைவிட வெறுப்பு அரசியல் என்ன இருக்க முடியும். கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவது அரசின் பணத்தில் அல்ல; ஹிந்துக்கள் நன்கொடையாக அளித்த பணத்தில்தான் நடத்தப்படுகிறது.

ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாத முதல்வா் ஸ்டாலின், நாங்கள் ஹிந்துக்களின் எதிரி அல்ல என பேசத் தொடங்கியிருக்கிறாா். முருக பக்தா்கள் மாநாட்டு வெற்றியால், எதையாவது செய்து அதிமுக, பாஜக கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என எண்ணுகிறாா்கள். அது ஒருநாளும் நடக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க