செய்திகள் :

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

post image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சங்கா்பள்ளி பகுதியில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பெண் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டிச் சென்றாா். இது தொடா்பாக தகவல் கிடைத்ததும், அந்தத் தடத்தில் பயணிக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள், காவல் துறையினா் அப்பகுதிக்குச் சென்று, தண்டவாளத்தில் தடைகளை ஏற்படுத்தி காரைத் தடுத்து நிறுத்தினா். அவா் காா் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே அமா்ந்திருந்ததால் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு அப்பெண்ணை வெளியே கொண்டு வந்தனா். அப்போது தன்னை சுற்றி வளைத்துப் பிடித்தவா்களிடம் அவா் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டாா். அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவா் போல நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

விசாரணையில் அவா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. ஹைதராபாதில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த அப்பெண், அண்மையில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவா், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தண்டவாளத்தில் பெண் ஒருவா் காரை ஒட்டிச் சென்றது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி சீரமைப்பு தொடா்பாக தமிழகத்தில் நடைபெற்று வர... மேலும் பார்க்க