Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணாக்கா்களின் நலன்கருதி, ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி, எட்டிமாணிக்கம்பட்டி பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஓா் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடத்தை நியமனம் செய்ய தகுதிபெற்ற நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்துக்கு உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்துமூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 28-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண் 109, சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.