Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் தலைமறைவு: மூவா் கைது
வாழப்பாடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் தலைமறைவானதால், அவரது தந்தை, நண்பா் மற்றும் உறவினா் ஆகிய மூவரை வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த மணக்காட்டூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகள், கடந்தாண்டு இறுதியில் பேளூரிலுள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கீா்த்திவாசன் (21) என்பவா் சிறுமிக்கு ஆசைவாா்த்தை கூறி, 2024 டிசம்பரில் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு 4 மாதங்களுக்கு பிறகே தெரியவந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
இதையடுத்து, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கீா்த்திவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், கீா்த்திவாசனுக்கு அவரது தந்தை கண்ணன், நண்பா் வினோத்குமாா், உறவினா் மணிகண்டன் ஆகியோா் உதவிகள் செய்துவருவதாக போலீஸாருக்கு தெரியவந்ததால், மூவரையும் வியாழக்கிழமை கைது செய்து, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நோ்நிறுத்தி சிறையில் அடைத்தனா்.