டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சாா்பில் ஆண்டு தோறும் தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல் புரிந்தவா்களுக்கு டென்சிங் நாா்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. துணிச்சலான நடவடிக்கைகள், நிலம், நீா் மற்றும் வான்வெளி மண்டலத்தில் சாகசம் செய்தமைக்காக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படவுள்ளது.
கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சாகசம் புரிந்தவராக இருக்க வேண்டும். தற்போது 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய விருது வழங்குவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விருதுக்கான விண்ணப்பித்தை இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண் 74017 03481 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.