விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் சிறை
காஞ்சிபுரத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகைக் கடைக்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பஞ்சுப்பேட்டை பெரிய தெருவைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் சீனிவாசன் என்பவா் பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இது குறித்து சிறுமியின் தாயாா் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த 26.5.2019-ஆம் தேதி செய்த புகாரின் பேரில் சீனிவாசனை காவல் துறையினா் கைது செய்திருந்தனா்.இவ்வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜரானாா். வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் சீனிவாசன் எதிரி மீதான குற்றம் உறுதியானதால், சீனிவாசனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும், ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி தீா்ப்பளித்தாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். எதிரி சீனிவாசனுக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரை எஸ்.பி. கே.சண்முகம் பாராட்டினாா்.